முகப்பு...

Saturday 25 April 2015

‪இதய_அரங்கு‬...!!



மனதாளும் மன்னவன் 
இதழ் திறவாது..
உணர்வுகளை உணர்ந்து
அவனை உள்வாங்கி
உணர்வுகளால் ஒன்றியதையெண்ணி
மனமொத்த மனமது வரமென
இறுமாந்திருக்கும் வேளையில்..

அனுபவ முட்கள்
கிழித்த வலியில்
இரத்தம் கசிய
மனம் வாடியிருக்கும் கொற்றவனை
காதலில் கசிந்துறுகும் காரிகை...

வாஞ்சையாய் வாரியணைத்து
வார்த்தைகளால் ஆறுதல் சமைத்து
அவனுக்கு
அமைதியைப் பரிமாறிட
எண்ணியிருக்க..

மனமொத்த மனமது
உரைக்காத போதும்..
அவன்
உணர்வுகளால் உந்தப்பட்டு
வலிகளை உள்வாங்கி
கொந்தளிக்கும் மனம்...
வார்த்தைகளை வற்றச் செய்திட..

வசமிழந்த வார்த்தைகளை சபித்து
மௌனத்தை
மொழிபெயர்க்கத் தெரிந்தவனுக்கு
மௌனமாய்
மௌனத்தால்
மருந்திடுகிறேன்
மனதினால்..!

மனமொத்த 
உணர்வுகளையடைந்தது
வரமா...? சாபமா..?
பட்டிமன்றம் நடத்தப்படுகிறது
என் இதய அரங்கில்...!

5 comments:

  1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Thanks for sharing your info. I really appreciate your efforts and I will
    be waiting for your further post thank you once again.

    My homepage: Fun Puzzle Game

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. Howdy! I know this is somewhat off topic but I was wondering which blog platform are
    you using for this website? I'm getting sick and tired of
    Wordpress because I've had problems with hackers and I'm looking at alternatives for another platform.
    I would be great if you could point me in the direction of a good platform.


    Here is my web-site ... Diced

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__