வார்த்தைகளை விதைத்து, நம்பிக்கை நீரூற்றி ஆயுளை அதிகரிக்கச் செய்து, மரணம் எனை அண்டவிடாது காக்கும் மருத்துவன்.
***
மரணித்த மனதையும் அன்பு மழை பொழிந்து புன்னகை மலர்களை மலரச்செய்யும் அற்புதன்.
***
மனதாளும் மன்னவனை மனதிற்குள் எண்ணும் நொடி, எதிரே தோன்றி தன் மரணமில்லாக் காதலை மனதிற்கு உணர்த்திச்செல்பவன்.
***
அவன் என் மௌனத்தையும், மொழிபெயர்க்கும் வித்தகன்.
***
அவன் என் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மா.
***
அவனை நெஞ்சினில் சுமக்கும் என்னை நித்தமும் கர்ப்பிணியாய் உணரச்செய்பவன்.
***
***
மரணித்த மனதையும் அன்பு மழை பொழிந்து புன்னகை மலர்களை மலரச்செய்யும் அற்புதன்.
***
மனதாளும் மன்னவனை மனதிற்குள் எண்ணும் நொடி, எதிரே தோன்றி தன் மரணமில்லாக் காதலை மனதிற்கு உணர்த்திச்செல்பவன்.
***
அவன் என் மௌனத்தையும், மொழிபெயர்க்கும் வித்தகன்.
***
அவன் என் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மா.
***
அவனை நெஞ்சினில் சுமக்கும் என்னை நித்தமும் கர்ப்பிணியாய் உணரச்செய்பவன்.
***