முகப்பு...

Tuesday 13 January 2015

சிந்தனை முரண்..

பிரசவிக்கப்படும் வார்த்தை குழந்தைகள் 
சில நேரங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும், 
சில நேரங்களில் மரணவேதனையையும் அளித்து 
இறவாத்தன்மை பெறுகின்றன..!
********
சிந்தனைகள் துளிர்த்து தளிர்களாய் 
சிலநேரம்...
உதிர்ந்து மடியும் சருகுகளாய் 
சிலநேரம....:)
***
பிறரின் குறைகளை சுட்டிக்காட்டும் மனம் 
தன் குறைகளை யாரும் சுட்டிக்காட்ட விரும்பாத மனம்..:)
***
துரோகத்தின் வண்ணம் 
தெறிக்கப்பட்ட
முகமனைத்தையும்
நிராகரிக்கிறது மனம்...
முகத்திரை 
கிழித்தெறியப்பட்டு
நிரூபிக்கப்படுவதற்கு
காத்திராமலே...!!

********
மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மனதை 
அலட்சிய வார்த்தைகளால்...
துவண்டு போகச் செய்யவும்., 
துவண்டிருக்கும் மனதை 
அன்பு வார்த்தைகளால் 
மகிழ்ச்சியில் மலரச்செய்யவும் 
அன்புடையவர்களுக்கே சாத்தியமாகிறது, 
****

6 comments:

  1. அனைத்தும் அழகிய வரிகள்...
    வாழ்த்துக்கள்...!

    வார்த்தைகள் நல்லவைகளாக இருந்துவிட்டால் வேதனை ஏன்...!

    ReplyDelete
  2. அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். தங்களுக்கும் இல்லத்தினருக்கும் மனமார்ந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்..:)

      Delete
  3. அருமை அக்கா...
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தம்பி. தம்பிக்கும் இல்லத்தினருக்கும் மனமார்ந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__