முகப்பு...

Friday 17 January 2014

பிரமிக்கவைக்கும் இயற்கை...!!


செல்லுமிடமில்லாம்
நமைப் பின்தொடர்ந்து
நமக்கானதென எண்ணவைத்து
மகிழச்செய்யும் நிலவு..!!
***
உறக்கத்தில்
சிரித்தும், அழுதும்
நம்மை மகிழ்விக்கும்
கபடம் விதைக்கபடாத குழந்தை...!!
***
நொடிப்பொழுதில்
ஒலி, ஒளியுடன் வானத்தில் ஓவியம்
ஏற்படுத்திச்செல்லும் மின்னல்..
***
ஒற்றை விதையில்
உருவாகும்
எண்ணிலடங்கா மரங்கள்..
***
வானவீதியில்
விசிறியெறியப்பட்ட
வைர கற்களாய்
மிளிரும் நட்சத்திரங்கள்..!!
***
வறண்ட பூமித்தாயின்
மனம் குளிர்விக்க
வருணன்
தன் ஈரவார்த்தைகளால்
கவிதைபொழிய...
அவன் காதல்மொழியில்
மனம் குளிர்ந்து
தன் மகிழ்ச்சிதனை
மண்ணின் மணம் வீசி
வெளிப்படுத்தும் பூமித்தாய்...!!
***
கண்முன்னே இருப்பதை
காணவிடாது மறைத்து..
வளர்ந்ததை வீழ்த்தியும்
வீழ்ந்திருப்பதை
உயரத்தில் அமர்த்தியும்
இடம்மாற்றித்
தடம் மாற்றித் தடுமாறவைக்கும்
ஆடிமாதக்காற்று...
***

6 comments:

  1. அனைத்தும் அருமை... முக்கியமாக பூமித்தாய்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ..தங்கள் வாழ்த்திற்கு நன்றியும், மகிழ்ச்சியும்..:)

      Delete
  2. கவிதைகள் பிரமிக்க வைத்தன...
    அருமை அக்கா...

    ReplyDelete
  3. மண்ணின் மணம் வீசி
    வெளிப்படுத்தும் பூமித்தாய்...!!//
    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__