முகப்பு...

Thursday 28 November 2013

சிதறல்கள்...

நிர்வாகத்தின்

வளர்ச்சியிலும்,
வீழ்ச்சியிலும்
தன் பங்கை திறம்பட
வகிக்கிறது
”தகவல் பரிமாற்றம்...”
----
உணர்த்தாமல் 
உணரவேண்டியதை
உணர்த்தி 
உணரவைப்பதைவிட
உணர்த்தாதிருப்பதும்,
உணராதிருப்பதும் மேல்....!
---
சந்தேக விதைகளை 

மனதுள் விதைத்து 
நம்பிக்கை கனிகளை 
அறுவடை செய்ய முயற்சிக்கிறோம் 
பலநேரம்..!
----
இரு(று)க்கும் 

நினைவுகளை 
இறக்(கி)க வைக்க முயற்சிக்கிறேன்..
இறக்க விரும்பாமல் பறக்கிறது
உனை நோக்கியே...!
----

10 comments:

  1. அனைத்து சிதறல்களும் அருமை... சிலது உண்மையும் கூட...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அக்கா கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்...

    முகனூலில் சொன்னதுபோல் விளக்காமலே விளங்கிக்கொள்வீர்கள் என இங்கு சொல்லாததால் தனிப்பெட்டியில் வருகிறேன் சந்தேகம் கேட்பதற்காக...

    வாழ்த்துக்கள் அக்கா...

    2013ல் இதுவரை 90 பதிவுகள்... இன்னும் ஒரு மாதம் இருக்கு ... இந்த வருடம் 2012யை தாண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தம்பி..:) தம்பி சொன்னவுடன் தான் கவனிச்சேன்..:( ஒரு மாதத்திற்குள் எப்படி அவ்வளவு பதிவு எழுத முடியும்..? நினைவூட்டியமைக்கு நன்றி தம்பி..:) முடிந்தவரை முயற்சிப்போம்..:)

      Delete
  3. வணக்கம்
    அருமையான படைப்பு.வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__