முகப்பு...

Sunday 4 August 2013

தூரிகை காயத்ரியின் - நன்றி _/\_

அன்புத்தோழமைகளுக்கு, மனமார்ந்த மாலை வணக்கம்.  


இன்றுடன் வலைச்சரத்தில் எமது பொறுப்பாசிரியர் காலம் முடிவடைவதால் நன்றி கூறித் தங்களிடமிருந்து விடைபெறுகிறேன். எழுத்துலகில் எழுத்தாணியை சரிவரப் பிடிக்கக்கூட கற்காத என்னையும் அழைத்து இந்த மலர்த்தோட்டத்தில் இளைப்பாற இடமளித்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், இத்துனை நாளும் எமது அரட்டைகளைப் பொறுமையாகப் படித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் எனதன்புத் தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

இந்த வலைச்சரத்தில், ஆங்காங்கே பூத்திருக்கும் எண்ணற்ற மலர்கள் அனைத்தையும் கோர்ப்பதற்கு இயலாது என்பதை அனைவரும் அறிவோம். விடுபட்ட மலர்கள் எமது கண்களுக்கும், எம் காலத்திற்கும் சிக்காது போனதுதான் காரணமே தவிர மலர்களின் மணத்திலோ, அழகிலோ எந்தக்குறையுமில்லை.  

வலைச்சரத்தில் கோர்க்கப்படாது விடுபட்டு, எமது தோழமைகளால் சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் அனைத்து மலர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.  அந்த மலர்களைக் கொண்டு வலைச்சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் தோழமைகளுக்கு பாராட்டுக்கள்.  

இந்த வாரம் தூரிகை கண்டெடுத்த முத்துக்கள் அனைத்தும் தொடர்ந்து ஒளிவீசிக்கொண்டிருக்க இறைவேண்டி வாழ்த்துகிறேன்.

தன் சிந்தனைச் சிதறல்களால்  இந்த வலைச்சரத்தை அலங்கரிக்கவிருக்கும் அடுத்த பொறுப்பாசிரியரை மனமார வாழ்த்தி வரவேற்கிறேன்.  தங்கள் அனைவருடைய அன்பிற்கும் நன்றி.அன்பை அரிதாரமாய்ப் பூசாமல் அன்பை உணர்ந்து உணர்த்துவோம்.  எங்கும் அன்பு தழைக்கட்டும்.  வாழ்க வளமுடன்._/\_

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__