முகப்பு...

Monday 12 August 2013

சிந்தனைச்சிதறல்கள்...






பொசுக்கப்பட்ட
உணர்வுகளின் சாம்பலில்
கண்ணீர் சேர்த்து
உள்ளத்தூரிகையால்
என் எண்ணங்களை எழுத
கவிதையாய் உன் பெயர்
ஓவியமாய் உந்தன் முகம்..!!
கவிதை படித்து, ஓவியம் ரசித்து
உள்ளம் மகிழ்ந்து
உணர்வுகளை
உயிர்ப்பித்துக்கொள்கிறேன்
ஒவ்வொருமுறை
பொசுக்கப்படும்பொழுதும்.....!

10 comments:

  1. //உள்ளம் மகிழ்ந்து
    உணர்வுகளை
    உயிர்ப்பித்துக்கொள்கிறேன்


    ஒவ்வொருமுறை
    பொசுக்கப்படும்பொழுதும்.....!//

    கடைசி இரண்டு வரிகளில் தான் எத்தனை எத்தனை சோகங்கள் தேங்கியுள்ளன. அருமையான ஆக்கம். பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்..:)

      Delete
  2. கவிதையாய் உன் பெயர்
    காற்றில் கலைவதில்லை!..
    ஓவியமாய் உன் முகம்
    இருளில் மறைவதில்லை!..
    ஏனெனில் எண்ணமே - வண்ணம்
    என் உள்ளமே - தளம்!..

    ReplyDelete
  3. உள்ளம் மகிழ்ந்து
    உணர்வுகளை
    உயிர்ப்பித்துக்கொள்கிறேன்
    ஒவ்வொருமுறை
    பொசுக்கப்படும்பொழுதும்.....!

    பீனிக்ஸ் பறவையாய் துளிர்த்தெழும்
    புதுமையான அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி..வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.._/\_

      Delete
  4. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கூறி
    சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி..தொடரட்டும் எண்ணற்ற பதிவுகள்..வாழ்க வளமுடன்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__