முகப்பு...

Sunday 28 July 2013

உணர்வுச்சிதறல்கள் தொடர்ச்சி...

கண்களால் புணர்ந்து
வார்த்தைகளை கருத்தரித்து
காதலை பிரசவிக்கிறேன்
உணர்வுகளால்...!!
****
குழந்தையின் நித்திரைப் புன்னகையில்
பூக்கும் பூவின்மணத்தில்
மயங்கிய மனமது
வார்த்தைகளை
துறவறம் செய்து

கவிதைக்கே கவிதையாவென
கவிபடைக்க முடியாமல்
சிந்தனையற்றுத் தடுமாறுகிறது
கவிஞனின் மனம்.....:!!
****
ஆசையெனும்
கண்ணாடிப்பெட்டிக்குள்
மனமென்னும்
கட்டுவிரியன்
அழகாய் ஊர்ந்துசெல்ல.....
கண்ணாடிப்பெட்டி உடைந்திட
ரசிக்கவைத்த  பாம்பது
ஆபத்தாய் மாறிடுமே....!!!
****

8 comments:

  1. தடுமாறாமல் வந்த வரிகள் அனைத்தும் ரசிக்கத்தக்கவை... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ...தங்களிடன் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி..:) _/\_

      Delete
  2. வணக்கம் தோழி!
    உங்களை இன்று வலைச்சரத்தில் ஆசிரியராகக் கண்டு இங்கு வந்தேன்.
    அடடா... என்னைப் பிரமிக்க வைக்கின்றீர்கள்!
    உங்கள் கவிதைகளில் திளைக்கின்றேன். மிதக்கின்றேன்...

    இங்கும் அழகிய கவிக்குழந்தைகளை காண்கின்றேன்!

    காதலே உங்கள் கவிச்சிசு ஆனதால்
    வாழும் உலகில் சிறந்து!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி..தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி. தங்கள் பின்னூட்டமே கவிதையாய் இரசிக்க வைக்கிறது..மகிழ்ச்சி..:)

      Delete
  3. ஒவ்வொரு வரிகளையும் மிக ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..நன்றியும், மகிழ்ச்சியும்..:)

      Delete
  4. மூன்றும் முத்தான கவிதைகள்..... பாராட்டுகள்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__