முகப்பு...

Tuesday 18 June 2013

எண்ணச்சிதறல்கள்..

ஒவ்வொரு காலையும்
கதிரவன் கண்மலர்வது தனக்காகவென
மகிழ்ந்து மலர்ந்திடும்
சூரியகாந்தியாய்
நித்தமும் உனையே நினைத்து
மகிழ்கிறேன்
நீ எனக்கானவன் என்ற
நம்பிக்கையுடன்...!!!


*****
என் எண்ணங்களை
நான் உணருமுன்பே
எடுத்துரைத்து
உள்ளத்தில்
உணர்வுபூக்களை மலரச்செய்த
உன் வார்த்தைப்பூக்களின் வாசம்
இன்று
மனமற்று, மணமிழந்து
மனதைக் கொல்லாமல் கொல்கிறதே..?!!
கொள்வதையும் கொல்வதையும்
நிறைவேற்றும் சக்தி 

உன் சொற்களுக்கே சொந்தமோ..??
*****

10 comments:

  1. மலர் போல் அருமை... இரண்டாவது நல்ல கேள்வி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை அருமை
    கொள்வதையும் கொல்வதையும்
    பயன்படுத்திய விதம் மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றியும், மகிழ்ச்சியும்..

    ReplyDelete

  4. மனமற்று, மணமிழந்து
    மனதைக் கொல்லாமல் கொல்கிறதே..?!!
    கொள்வதையும் கொல்வதையும்
    நிறைவேற்றும் சக்தி
    உன் சொற்களுக்கே சொந்தமோ..??

    கவிகாயத்ரியின் எண்ணச்சிதறல்
    சிதறிப்போன எண்ணங்களையும்
    சிதறிப்போனவர்களையும்
    ஒன்று சேர்க்கும் விதமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஆனந்த்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__