பூக்கோலம் போட
வைக்கப்படும் புள்ளிகளில்
சிலநேரம்
நம்மையறியாமலேயே
உருவாகிறது
அழி(விழ்)க்கமுடியா சிக்குக்கோலம்..
வைக்கப்படும் புள்ளிகளில்
சிலநேரம்
நம்மையறியாமலேயே
உருவாகிறது
அழி(விழ்)க்கமுடியா சிக்குக்கோலம்..
****
தொண்டையில் சிக்கிய முள்ளாய்
குத்தும்
என்
பகிரப்படாத உணர்வுகள்
விடுதலை பெற விரும்ப
அகத்திலேயே சிறைவைக்கிறேன்
நீ
அவதிக்குள்ளாவதை மனம்
விரும்பாததால்..!!!
****