முகப்பு...

Sunday 28 April 2013

அகத்தின் வலி...!!!


அகத்தின் வலிகளை
முகத்தில் புன்னகையேந்தி
மறைக்கும் முயற்சியை
முறியடித்து
எள்ளிநகையாடி எட்டப்பனாய்
காட்டிக்கொடுக்கிறது
நெகிழும் குரல்..!!
****
அன்புக்குரியவர் வழங்கும் பரிசு
வலியாக இருப்பினும்
மகிழ்வுடன் ஏற்கவே விரும்புகிறது மனம் ...
***
ஒருவரின் நம்பிக்கையை காப்பாற்றும்போது,
ஒருவரின் நம்பிக்கையை இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு
ஆளாக்கப்படும் நேரத்தில் இருதலைக்கொள்ளி எறும்பாய் மனம்...
 ****


4 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__