முகப்பு...

Saturday 13 April 2013

உன்னோடு நான்...!!!

குழந்தை நீயும்...
கொங்கைசுவைத்திட்ட வேளையிலே
”ம்ம்” என்றெழுப்பிய குரல்..
இன்றும் இன்னிசையாய்
காதினில் ஒலிக்கிறது...!!

கண்ணாடி பார்த்து
முகப்பூச்சு பூசி, மீசை வரைந்(ளைத்)து
உன்னழகு காண்பதைக்
கண்டு ரசித்த காட்சிகள்
கண்முன்னே காட்சியளிக்கிறது நித்தமும்..!!

பசித்த உனக்கு உணவளித்து
நீ
உணவருந்திய
அழகை நினைத்து ரசிக்கிறேன்
அணுதினமும்....!!

உன்கரம் பிடித்து சுற்றித்திரிந்த
இடங்கள் உன்னோடு கழித்த நாட்களை..
நித்தமும் நினைவூட்டுகின்றன..!!

ஓடிக்களைத்து
நீ
ஓய்ந்து கண்மூடிக் களைத்திருக்க..
எண்ணெய்த் தேய்த்து
உனை உறங்கவைத்து
நீ உணரா நேரத்திலும்
முகத்தினில் முத்தமிட்டு
அகமகிழ்ந்தது நெஞ்சினில் நிலைத்திருக்க...

தூரத்தில் நீயிருப்பினும்..
இதயத்துள்ளிருக்க
உன்னோடான நாட்களை
உள்ளத்துள் எண்ணியெண்ணியே
இன்புற்றிருக்கிறேன் இன்று...!!

உனைப்பிரிந்திடும் நேரத்திலே
உனையணைத்து
உச்சிமுகர்ந்து மனம்குளிர முத்தமிட
மனதும் ஏங்க..
அலையெனத் திரளவிருந்தக்
கண்ணீரைக் கட்டுப்படுத்த அன்று
மௌன ஆபரணம் அணிந்திட்டேன் நானும்...!!

நீ
வெற்றிக்கனியை சுவைத்து
அமராகாவியமாய் அகிலத்தில் விளங்கிட..
உயிரையும் துறக்க
உறுதிபூண்டிருக்கும் - என்
பிரார்த்தனைகள் தொடரும்
ஒவ்வொரு நாளுமே...!!

உள்ளத்தில் குடிகொண்ட
நீ
வலியில் துடிக்கும் நேரத்தில்
அழுகைக்குக் காரணம் விளங்கிடாமல்
பரிதவிக்கும்
என்
உணர்வின் உணர்வறியாயோ....??

மரணத்தை வென்றிட
விரும்பிடினும்..;
நீ
தவிர்க்கவியலா மரணத்தைத் தழுவுமுன்
உனக்கென உன்னத இடம் பிடிக்க
முன் சென்று காத்திருப்பேன்...!!

மரணம்
உனை வென்றிடின்
எனை வந்தடைவாய்...
மரணத்தை
நீ வென்றிடின்
இன்னொரு பிறவியெடுக்கிறேன்
என் கரம் பிடித்து அழைத்துச் செல்.
உன் மடிமீது
குழந்தையாய் உறங்கக்காத்திருக்கிறேன்...!!











14 comments:

  1. முதலில் ரசனை அருமை... முடிவில்... உணர்வு மிக்க வரிகள்... பிரிவின் வலிகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..:) இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      Delete
  2. Replies
    1. வாங்க தோழர்..மிக்க நன்றி.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      Delete
  3. தாய்ப்பாசம் வெளிப்படுத்தும் அருமையான கவிதை! நன்றி! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி..தங்களுக்கும் மனம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..

      Delete
  4. அருமையான வரிகள்
    "மரணம்
    உனை வென்றிடின்
    எனை வந்தடைவாய்...
    மரணத்தை
    நீ வென்றிடின்
    இன்னொரு பிறவியெடுக்கிறேன் .."

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      Delete
  5. Replies
    1. :) நன்றி தம்பி. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      Delete
  6. மரணத்தை
    நீ வென்றிடின்
    இன்னொரு பிறவியெடுக்கிறேன்
    என் கரம் பிடித்து அழைத்துச் செல்.
    உன் மடிமீது
    குழந்தையாய் உறங்கக்காத்திருக்கிறேன்...//

    மனம் கவர்ந்த வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__