முகப்பு...

Monday 8 October 2012

இறை...



 மூடிய விழிகளும்
விரைத்த உடம்பும்,
கோர்த்த கரங்களுமாய்
ஏகாந்தமாய் இறை உணர
எத்தனிக்கும் வேலைதனிலே...

எண்ணம் விழித்திருக்க
சிதறும் சிந்தனைகளும்
சிந்தும் கண்ணீரும் தடைபோட..

உள்ளிழுக்கும் சுவாசமும்
இதயத்தை அழுத்த
இழுப்பது எது..
அழுத்துவது எது...
இறை நாடுவது எது..
எண்ணத்தை சிதறடிப்பது எது..
ஏதுமறியாமல்

விழிநீரும் வழிந்தோட..
சிவந்த விழிகளுடன்
சிம்மவாகினி
செவ்விதழ் நாயகியை
இதயத்தாமரையில்
இருத்திப்பார்க்க
எத்தனிக்கும் எம்முயற்சியும்
ஈடேறுமோ..???


3 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__