முகப்பு...

Friday 7 September 2012

சற்றேனும் ஓய்வெடு....!!!



நாலாறு மணியும்
நெஞ்ச சிம்மாசனத்தில் நிரந்தரமாய்
அமர்ந்தவனே..
சற்றேனும் ஓய்வெடு...!!

பந்தியில் பாசம் பரிமாறி
காதல் நீரூற்றி
அமுதுபடைக்கிறேன்
பசி,தாகம் தணிக்க
சற்றேனும் ஓய்வெடு...!!!

மடியெனும் மஞ்சத்தில்
உன் கேசக்குழந்தையோடு
ஐயிரண்டு விரல்களால்
ஆடிப்பாடி..
காதல் கீதமிசைத்து
முந்தியை விசிறியாக்கி
முத்தத்தில் குளிர்வித்து
உறங்கவைக்கிறேன்
சற்றேனும் ஓய்வெடு...!!

உனக்கும் அழகுதான்..
பாரதிசொன்ன
நிமிர்ந்த நடையும்,
நேர்கொண்ட பார்வையும்..!!

ஒளிவீசும் கண்களால்
காதல்வலைவீசி
எனை ஆயுட்கைதியாக்கி
மௌனிக்கச்செய்ய
சற்றேனும் ஓய்வெடு...!!

ஞானிக்கழகு மௌனம்..
ஞானத்தையாள்பவனுக்கு
மௌனமும் அழகாகுமா..??

நெஞ்சத்திலமர்ந்து
நினைவில் வருத்துபவனே..
அள்ளியணைத்து ஆரத்தழுவி
நிசத்தில் நாம்
அன்புக்கடலில் மூழ்கி
முத்தெடுக்க
சற்றேனும் ஓய்வெடு...!!


4 comments:

  1. ரசிக்க வைத்தன வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..:)தங்கள் எம்மை வளப்படுத்தட்டும்..

      Delete
  2. அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    காசியும் ராமேஸ்வரமும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
    உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே..பார்வையிடுகிறேன்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__