முகப்பு...

Thursday 19 July 2012

விதியின் விளையாட்டு...



இமைக்கும் நேரத்துள்..
மின்னலென மனதில்
சிம்மாசனமிட்டமர்ந்து....
எண்ணத்திற்கு
வண்ணம் சேர்த்து
வானவில்லாய் மாற்றினாய்..

நொடியும் மறக்கமுடியா
உன்நினைவு எனை ஆட்டுவிக்க..
விதியின் சதுரங்க ஆட்டத்தை
வெல்லவும் செய்வேனோ......??
வேடிக்கை காண்பேனோ....??

உன்நினைவில் உறக்கமிழந்து
உண்மையுணர துடிக்கும் மனம்..
உண்மையுணர மறுத்து
உனையே சுற்றும் மனம்..
உண்மையுணர்ந்தும் உணராமல்
தனையே ஏமாற்றிக்கொள்ளும் மனம்..
உண்மைக்கும், உணர்விற்கும் இடையே
ஊச(ஞ்ச)லாடும் மனம்....

நித்தமும் உனை நினைத்து
நெக்குருகித் தவிக்கும் நான்
உனை அடைவேனா....?
உன்மத்த நிலையடைவேனா..??
எடுத்து(ம்) உரைப்பாயோ
என் இறைவா......??!!!

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__