முகப்பு...

Thursday 21 June 2012

புதிர்........!!



உன் உதட்டோர இகழ்ச்சியும்
ஒற்றைச் சொல்லும்
ஓராயிரம் ஊசியாய் இறங்க...
வழியும் இரத்தமும்
உன் பெயரைக் கூற..
இதயம் வடிக்கும் இரத்தமழையில்
உனை குளிர்விக்கிறேன் நானும்...!!!



நொடியில் நீ கூறும்
அன்பான வார்த்தை
மலராய் மனதை வருட..
காயம் ஏற்படுத்தியவனே
காயத்திற்கு மருந்தாகவும் விளங்கி
புரியாத புதிராய்த் தோன்றுகிறாய்..!!!

அன்பையும் புதிராய் வழங்கும்
நீ
அன்பை
அன்புடையவருக்கு
அன்புடன் பகிரவேண்டும்..
என் விருப்பமும் நிறைவேற்றுவாயா....??



4 comments:

  1. Replies
    1. உஸ்மான் ஜி...நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் வருகை...வருக...

      Delete
  2. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
    தொடருங்கள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி...அனைவரது ஊக்கத்தால் என் முயற்சி தொடரும்..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__