முகப்பு...

Friday 4 May 2012

உனக்குள் நான்....!!





அகமுடையவனே...!!
அன்பு காட்டுவதில்,
அன்னையாய்....

வளர்ச்சிக்கு வித்திட்டு
ஆலோசனை கூறி வழிகாட்டும்போது,
தந்தையாய்.....



நானறியா எனை
அறியவைக்கும்போது...
பரமஹம்சனாய்..

பாசம் காட்டி வழிநடத்தும்
சகோதரனாய்...

ரசிப்பதில் நல்ல ரசிகனாய்...
குழந்தையாய்…..

மனம் சோர்வடையும்போது
நட்பிற்சிறந்த கர்ணனாய்...

பாதுகாக்கும்போது
நல்ல தளபதியாய்..

மனதை ஆட்கொண்டிருக்கும்
இறைவனாய்...

யாதுமாய் எனை வியாபித்தவனே...
உனக்குள்
நான் யாராக இருக்கிறேன்...????


No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__