முகப்பு...

Tuesday 28 February 2012

பிச்சைக்காரன்......


உழைக்க மனமில்லாமல்
அவனும் உற்சாகமாய்
கை நீட்டுகிறானே...

ஒரு பிடி சோற்றுக்காக
ஓடி ஓடி இரைஞ்சி நிற்க..


வகை வகையாய் வசை கேட்டும்
வயிற்றின்  குரல் வளமாய் ஒலிக்க..
வறுமையோடு  வாழ்வதா...?
வசை கேட்டு வாழ்வதா...??

எவனோ பிழைப்புக்காக கடத்த
ஏந்துகிறானே அவனும் கையை...!!

கறுப்புப் பணமு மங்கே..
கல்லாய் வீற்றிருக்க..
இவனும் கையேந்துகிறானே 
காசுக்காக...!!


கல்வியாளனும் கல்விச்சாலையிலே
கைநீட்டுகிறானே...!!

அரசாங்க அதிகாரியுமே
சொத்துக்காக கையேந்துகிறானே...!!

அரசியல்வாதியுமே
நிதிகளுக்காக கையேந்துகிறானே...!!


தனவானிவனுமே 
கருப்புப்பணத்திற்காக 
அண்டை நாட்டிடமே 
அடைக்கலத்திற்காக கையேந்துகிறானே...!!

அனைவருமே கையேந்த..
அவனுமே
அன்றாட உணவுக்காக 
கையேந்துகிறானே....!!!

ஒரு வேலை சோற்றுக்காக....
ஓயாமல் வசைவாங்கி..
இப்படியும் வாழ வேண்டுமா...??
மனம் வருந்த..
மனதிற்கும்வயிற்றுக்கும் போட்டி..

வயிற்றின் வெற்றியை வசை கேட்டு
கொண்டாடுகிறான் அவனு மங்கே....!!!!:(:(






















No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__