முகப்பு...

Sunday 26 February 2012

காவியத் தலை(வி)வன்...


நாம்..
உல்லாசமாய்
ஓடியாடித் திரிந்ததென்ன...??
ஊஞ்சல் கட்டி விளையாடியதென்ன..??



ஓய்வில்லாமல் மகிழ்ந்ததென்ன..??
ஆடிப்பாடி ஆர்ப்பரித்து.
ஆண்டு பல காதலித்தும்..
விதி செய்த சதியோ இல்லை..
உன் வீரமிழந்த செயலோ....??

மனத்திலுள்ளவனை
மறந்தாற்போல்..
மங்கையவள்
மங்கள நாண் பூட்டி
மணாளனுடன் சென்றுவிட...


இதயத்திலிருப்பவளே
என்னைத் தன்னந்தனியாய்
தவிக்கவிட்டு
உன் நினைவலையால்
கட்டுண்ட எனை
இருதலைக் கொள்ளியாய்
இம்சிப்பதேனோ..?



மங்கள நாண் பூண்டாலும்
மங்கையிவள் மனம்
வரண்ட பாலையாய்....
நீறுபூத்த நெருப்பாய்
உன் காதல் கனலில் தகிக்கும் என்னை..
அந்தக் காலனும் 
காதலிக்கத் தொடங்க.,

அவன் கொண்ட பசலைக்கு 
எனை வதைக்க..
மரணத்தை எதிர்நோக்கியே நானும்..
காலனவன் கைபிடிக்கும் நேரத்தில்
காதலை கற்பித்தக் காவியத் தலைவன்,உன் தோள் சாய விரும்பும் மனம்..
மனசாட்சிப் பேசும் நேரமிது..
மரணிக்கும் தருவாயில் உன்
மடியில் உயிர் நீக்க மகேசனை வேண்டுகிறேன்..
உனைத் தன்னந்தனியே தவிக்க விட்டு வந்த என்னை
மன்னிக்க வேண்டியே
மன்றாடி வேண்டுகிறேன்...
என்னவனே என்னுயிரை எமனிடம் தருவாய் நீயே...



கண்மனியே...!!
காதலித்த எனைக் கைவிட்டாலும்
காலனவன் கைபிடிக்கும் நேரத்தில்
காண விழைந்து நீயும்
காவியம் படைத்தாயே..

காலனவன் பாதத்தை என்
கண்ணீரால் துடைக்க..


துணைவி உனை
திருப்பியும் தருவானா....??
என்னவளே..
என் சக்தி உனை இழந்து
நான் சவமாய் வாழ்வதும்
சாத்தியமா....??




No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__