முகப்பு...

Wednesday 4 January 2012

ஆண்கள் இல்லா உலகம்....!!



புயலை சந்தித்தப் பூமியாய்...
எங்கும் வெறுமை........:(

என் அழகை
இரசிக்க ஆளில்லாமல்..
அலங்கரிக்கவும் தோன்றாமல்...

ஆண்களைக் கண்டால்
வரும் அந்த கொஞ்சுமாங்கிலம்
பேசுவது எங்ஙனம்..??


விடியுமுன்னெழுந்து..
காஃபி போட்டுக் 
கவிதையாய் பேசி எழுப்புவது யார்,...??

யாரை வைத்து...
சமையல் கற்றுக்கொள்ள...

தோட்டத்தில் மலர்ந்தாலும்
அவன் சூட்டும் மல்லிக்கு
உள்ள வாசம் வருமா...??

இனி நொடிக்கொரு முறை
என்ன செய்கிறாய் என அன்பாய்
கண்காணிப்பது யார்..???

பக்கத்து வீட்டின் பெருமையைக்
கூறுவது யாரிடம்...??

தொலைக்காட்சித் தொடர்
விளம்பர நேரத்தை
கழிப்பதும் சாத்தியமா...??

வெங்காயம் நறுக்கிக்கொடுக்க..
பொழுதுபோகாத நேரத்தில்
பிறந்தவீட்டை வம்புக்கிழுக்க...
யாரிருப்பார்...??

சண்டையிட,
நகைக்கடை,புடவைக்கடையில்
குழந்தையுடன் காத்திருக்க
ஆளில்லாமல்..

நகைபட்டுப்புடவை கேட்பது
யாரிடம்..??

மங்கையரின் தங்கத்தைத் திருடி
பிழைப்பவன் வாழ்வது எங்ஙனம்...??

திருடனில்லா ஊருக்கு
காவல்நிலையமெதற்கு...??
காவல்துறையுமெதற்கு...??

சிகரெட்மதுபானக் கடைகள்
வெறிச்சோடி கிடக்க...

குற்றமில்லா இந்த பூமியில்..
மாற்றத்தை எதிர்நோக்கி
பூமித்தாயும்...

என் சுகம் பகிரவும்,
சோகத்திற்கு காரணமாயும்
யாரிருப்பார் இனி...??

ஆணில்லாத உலகம்..
அமானுஷ்யமாய்....
சோகமே வடிவாய்.....:(:(



No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__