முகப்பு...

Thursday 15 December 2011

மனித நேயம்.....

பெட்டிப் பெட்டியாய் வீடு,
அதுக்கு அடுக்குமாடின்னு பேரு..

அக்கம்பக்கம் யாரிருக்கா
அறியமாட்டோம்..

அன்புடன் ஆறுதலாய்
பேசமாட்டோம்..

அவசரத்திற்கு அழைத்தாலும்
செல்லமாட்டோம்..

அன்றாட வேலைகளை
இயந்திரத்திடம் விட்டுவிட்டு...
இயந்திரமாய் நாங்கள்....

மரங்களை வெட்டி.,
வீடுகளமைப்போம்..
நாங்கள்...
காற்று வாங்கவென கடற்கரை நோக்கி
படையெடுப்போம்...

இயற்கையை அழித்து.,
செயற்கையில்.,
இயற்கை தேடும் சிந்தனைவாதிகள்..
நாங்கள்தான் நாகரீக மனிதர்கள்...?!!

அம்மாவின் அறுசுவை உணவின்
அருமையறிய மாட்டோம்,
துரித உணவை சுவைத்து.,
மகிழ்ச்சியடையும் மனது...

மனசாட்சியை மதிக்காமல்
தாயின் பாசமும், தந்தையின் தியாகமும் மறந்து,
முதியோர் இல்லம் அனுப்பும் நாகரீக மோகம் ...

மனிதா நீயும் விழித்துக்கொள்...
மனித நேயம் வேண்டுமென ஒத்துக்கொள்...
மனித நேயம் இல்லா மனம்.,
இருந்தென்ன...? இறந்தென்ன...
?




No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__