முகப்பு...

Friday 30 December 2011

”கொல்” அல்லது ”கொள்”

நீ
வெற்றியடைய
என்னுயிரையே தியாகிக்கத்
தயாராயிருக்க...

என் உணர்வையா
விடமாட்டேன்.....??

உனக்காய் உருகும்
என் இதயமுமே...!!

என் மனமெறியும் வெளிச்சத்தில்
உனக்கான வெற்றிப்பாதையமைப்பேன்...

உன் கை வலிக்கும் வரை
என்னைக் காயப்படுத்து

மனம் குளிரும் வரை..
என் மனதை ரணமாக்கு....

தேன் சுவைத்த நான்
திராவகத்தையும் ருசிக்கக்
காத்திருக்கிறேன்...

உள்ளத்தைப் பகிர்ந்த நீ...
உதட்டில் சிந்தும் அலட்சிப்
புன்னகையை அடைவதிலும் ஆனந்தமே.....

உள்ளத்தில் எரிமலையாய்க்
குமுறும் என்னை
அமைதிபடுத்துவதும்...
என்னுள் உள்ள நீயே....!!

மகிழ்வுடன் ஏற்கிறேன்..
எனைக்”கொல்”வதும், ”கொள்”வதும்
நீயென்பதால்......!!!


No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__